நாட்டு மக்களின் நலனுக்காக இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் சஜித் முன்வைத்துள்ள கோரிக்கை
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு இன்று(20.01.2023) இடம்பெற்றுள்ளது.
இதன்போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
பல அரசியல் தரப்புக்களுடன் கலந்துரையாடல்

இதேவேளை இலங்கையின் ஒட்டுமொத்த மக்களின் நலனுக்காக இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பக்லேவும்
கலந்துகொண்டார்.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கையின் பல அரசியல் தரப்புக்களை சந்தித்து தொடர்ந்து கலந்துரையாடலில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri
பிரித்தானியாவில் திருமணம்... குடும்பம் ஒன்று விமான நிலையம் செல்லும் வழியில் கோர சம்பவம் News Lankasri
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam