நள்ளிரவு வரை ஏழு அமைச்சர்களுடன் பேச்சு நடத்திய இந்திய வெளிவிவகார அமைச்சர்
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் நேற்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி உட்பட ஏழு அமைச்சர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
நள்ளிரவு வரை தொடர்ந்த பேச்சுவார்த்தைகள்
இரண்டு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று பிற்பகல் இலங்கைக்கு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பெருந்தோட்ட தொழிற்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன, மின்வலு, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, முதலீட்டு ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இவர்களுடன் நேற்று நள்ளிரவு வரை இந்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் உத்தியோகபூர்வமாக அறிவித்ததாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி நேற்று நள்ளிரவு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதனிடையே இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இன்று முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri
