சுவிஸ் தூதரக அதிகாரிகள் - செல்வம் அடைக்கலநாதன் இடையில் விசேட சந்திப்பு
சுவிஸ் தூதரக அரசியல் விவகாரங்களுக்கான முதல் செயலாளர் ஜஸ்டின் கொய்லட் ( justine boillat) தலைமையிலான குழுவினர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
குறித்த சந்திப்பானது, இன்றைய தினம் (22.10.2024) மன்னாரில் உள்ள செல்வம் அடைக்கலநாதனின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
மன்னாரிற்கு ஜஸ்டின் கொய்லட் விஜயம் ஒன்றை மேற்கொண்ட நிலையில் குறித்த சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.
கட்சியின் செயல்பாடுகள்
இதன் போது கட்சியின் செயல்பாடுகள் மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்,தற்போதைய தேர்தல் நிலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து குழுவினர் கேட்டறிந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மன்னார் மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும்,தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து முன்னாள் செல்வம் அடைக்கலநாதன் குறித்த குழுவின் கவனத்திற்கு கொண்டுசென்றதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளை, குறித்த குழுவினர் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான
நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ, மற்றும் சிவில் சமூக
பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
