மகிந்தவைச் சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்(Photo)
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இன்று(20.04.2023) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதன்போது, இருவரும் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு மேலும் கலந்துரையாடியுள்ளனர்.
இந்தியாவின் ஆதரவு
இலங்கையுடனான கடன் மறுசீரமைப்புக்கு இந்தியாவின் ஆதரவு உள்ளிட்ட பரஸ்பர நலன்கள் குறித்து இருவரும் விவாதித்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கி வரும் ஆதரவுக்கு இந்தியா துணைநிற்பதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உறுதியளித்துள்ளார்.
இதேவேளை இலங்கையில் இந்திய முதலீடுகள் குறித்தும் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
நட்பு ரீதியிலும் சுமுகமான சூழ்நிலையிலும் நடைபெற்ற இந்தச் சந்திப்பு,
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும்
வலுப்படுத்தும் என முன்னாள்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.





நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
