நில அபகரிப்பு தொடர்பில் கனடா மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்களுடன் கலந்துரையாடல்
நில அபகரிப்பு தொடர்பில் கனடா, பிரித்தானியா உயர்ஸ்தானிகர்களுடன் கிழக்கு மாகாண நில மீட்பு வலையமைப்பினர் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
குறித்த கலந்துரையாடலானது நேற்று (06.05.2026) திருகோணமலை Trinco Blu விடுதியில் இடம்பெற்றது.
இதன்போது, கிழக்கு மாகாணத்தில் மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரி மனு கையளிக்கப்பட்டது.
நில அபகரிப்பு
அத்துடன், அந்தப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேலும், இந்த விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் தாங்கள் எதிர்வரும் காலங்களில் கலந்துரையாட முனைவதாக, உயர்ஸ்தானிகர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, இலங்கை மற்றும் மாலை தீவுக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானியர் அன்ட்ரூ பற்ரிக் ஆகியோர் திருகோணமலை மாநகர முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் ஆகியோரை சந்தித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதுக்குடியிருப்பு தவிசாளர் மீது நிதி மோசடி குற்றச்சாட்டு - கட்சி தலைவருக்கு பறந்த கடிதம்
எதிர்கால அபிவிருத்தி
இதன்போது திருகோணமலை மாநகரத்தின் தேவைகள் எதிர்கால அபிவிருத்தி நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

மேலும், மாநகர உட்கட்டமைப்பு வசதிகள், சுற்றுலா அபிவிருத்தி, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் தொடர்பாகவும் உயர்ஸ்தானியர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து கலந்துரையாடப்பட்டது.
இந்தச் சந்திப்பில் திருகோணமலை மாநகர முதல்வர் க.செல்வராஜா, பிரதி முதல்வர் மௌசூம் மற்றும் மாநகர ஆணையாளர் உ.சிவராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
திறைசேரியில் மேலும் 500 மில்லியன் கொடுப்பனவில் ஏற்பட்டுள்ள குழப்பம் : வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்






