ஊடகவியலாளர்களின் சம்பள உயர்வு குறித்து நாடாளுமன்றில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்
நாட்டிலுள்ள ஊடகவியலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
மனிதரின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அளவிலான சம்பளம் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டுமெனவும் கூறியுள்ளார்.
நாட்டில் தற்பொழுது ஊடகவியலாளர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைமைகளை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்
மேலும், பத்திரிக்கை நிறுவனங்களினால் வழங்கப்படும் ஊதியம் போதுமானது அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் வரவு செலவுத்திட்ட விவாதத்தில் பங்கேற்று இதனை தெரிவித்துள்ளார்.

சமூகத்திற்கு செய்திகளை எடுத்துச்செல்லும் ஊடக நிறுவனங்கள் மூடப்பட்டால் தகவல்கள் சென்றடைவது தடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எனவே ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri