ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் தீர்க்கப்படாத காணி பிணக்குகள் தொடர்பான ஊடக சந்திப்பு
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் தீர்க்கப்படாத காணி பிணக்குகள் தொடர்பான ஊடக சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த ஊடக சந்திப்பு இன்று காலை 10 மணிக்குக் கிளிநொச்சி ஊடக மையத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது நீண்ட காலமாக தமது காணிப் பிணக்குகள் தீர்க்கப்படவில்லை எனவும், நடமாடும் சேவைகளில் தீர்க்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தவும் இல்லை எனவும் முறிகண்டி பிரதேச காணி பிணக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து வந்து ஆண்டுகள் பல ஆகியும் நிரந்தர இடமும் வீடுமின்றி உறவினர் வீடுகளில் தங்கி வாழ்வதாகவும், தமது காணி பிணக்குகளை தீர்த்து நிம்மதியான வாழ்விற்கு வழியமைத்து தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீண்டகாலம் தீர்க்கப்படாத பிரச்சினையால் மன உளைச்சலுக்கு ஆளான தனது தந்தை மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாகவும், தாய் மற்றும் சகோதரர் காணி இல்லாது சிரமங்களுடன் வாழ்வதாகவும் ஊடக சந்திப்பில் பெண்ணொருவர் குறிப்பிட்டுள்ளார்.
காணி உரிமை கோடும் ஆவணங்கள் இருந்தும் நீண்ட காலமாக தொடரும் காணிப் பிணக்குகளை தீர்த்து நிம்மதியான வாழ்வுக்கு வழிசெய்யுமாறு ஊடக சந்திப்பில் காணி பிணக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 30இற்கு மேற்பட்ட காணிப் பிணக்குகள் தீர்க்கப்படாமல் தேங்கிக் கிடக்கும் நிலையில், வீட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட அரச சலுகைகள் இல்லாது பல குடும்பங்கள் வாழ்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.





டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam
