எம்மை நாமே ஆள வேண்டும்! கிளிநொச்சியில் சிறீதரன் எம்.பியின் மே தின பிரகடனம்
“யாமார்க்கும் குடியல்லோம்” எனும் கருப்பொருளில், கிளிநொச்சி மாவட்ட தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ்த் தேசிய மே தின எழுச்சி நிகழ்வில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் விசேட மே தின பிரகடன உரையை நிகழ்த்தியுள்ளார்.
இந்த விஷேட நிகழ்வு நேற்றைய தினம் (01.05.2026) கிளிநொச்சியில் நடைப்பெற்றிருந்தது. அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
பழைய பந்திக்கே செல்லும் புதிய அரசு
இலங்கை தீவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் மக்களிடையே ஏற்படுத்திய நம்பிக்கையைச் சரிவடையச் செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பௌத்த சிங்கள மேலாதிக்க மனநிலைகளில் இருந்து முற்றிலும் வெளிவர முடியாத ஒரு புதிய அரசே இன்று பதவியில் உள்ளது என்றும் சாடினார்.

மேலும், லெனினையும் மார்க்ஸையும் முன்னிறுத்திப் பேசும் இந்த அரசின் புதிய அரசியல் கலாசாரம் என்பது பழைய பந்திக்கே திரும்பியுள்ளது.
அத்துடன், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் குடியிருப்புக் காணிகள் இன்றும் படையினர் வசமே உள்ளன.
வளப் பாதுகாப்பு என்ற பெயரில் தமிழர் நிலங்கள் அரச திணைக்களங்களினால் ஆக்கிரமிக்கப்படுவதுடன், விளைநிலங்கள் மீது விகாரைகள் அமைக்கப்படுவதும் தொடர்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

வாழ்வாதார நெருக்கடி
அதனை தொடர்ந்து, பயங்கரவாதத் தடைச் சட்டம் எந்தவொரு மாற்றமுமின்றி இன்றும் வீரியமாகவே உள்ளது.
மேலும், கடல்வள மேலாண்மை அயலக மீனவர்களிடம் அகப்பட்டு கிடப்பதால், எமது மீனவர்கள் சுய பொருளாதாரத்தை அடைய முடியாத நிலை காணப்படுகின்றது.
இதனால் நிலையான முகாமைத்துவம் இன்றி உற்பத்திச் செலவு மற்றும் விலை ஏற்றம் காரணமாகத் தமிழ் விவசாயிகள் பேரிடரை எதிர்கொள்கின்றனர்.
அத்தடன், தினக்கூலிகள் இன்றும் அதே நிலையிலேயே உள்ளனர். நிலம் வறுமையால் பெருத்து, வாழ்வாதாரம் நலிந்து போயுள்ளது என சுட்டிக்காட்டினார்.

நான் செத்துப்போகலாம்.. கண்கலங்கி அழும் அண்ணாமலை! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri