இ.தொ.கா. அரசுக்கான ஆதரவை இன்னும் முழுமையாக விலக்கிக்கொள்ளவில்லை : சோ.ஸ்ரீதரன்
இ.தொ.கா. அரசுக்கான ஆதரவை இன்னும் முழுமையாக விலக்கிக்கொள்ளவில்லை, என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதி செயலாளரான சோ. ஶ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
ஹட்டனிலுள்ள கட்சி தலைமையகத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
"மாபெரும் தொழிற்சங்கத் தலைவர் அமரர் வெள்ளையனால், 1965 மே முதலாம் திகதி தொழிலாளர் தேசிய சங்கம் நிறுவப்பட்டது. தொழிலாளர்களுக்கு உரிமைகளை பெற்றுக்கொடுக்கவும், தொழிலாளர்களின் நலன்புரி விடயங்களுக்காகவும் சங்கம் தீவிரமாக செயற்பட்டது. தற்போதும் அதே வழியில் செயற்படுகின்றது.
தற்போதைய தலைவர் பழனி திகாம்பரம் அமைச்சராக இருந்த காலகட்டத்தில், மலையகத்தில் தனி வீட்டு திட்டத்தை ஏற்படுத்தி, புதிய திருப்பத்தை ஏற்படுத்தினார்.
அதேவேளை, ஜனாதிபதியும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியே மக்கள் போராடிவருகின்றனர். ஆனால் மலையகத்தில் இடம்பெற்ற தன்னெழுச்சி போராட்டத்தை இ.தொ.கா. தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முயற்சித்தது”எனவும் இதன்போது குற்றம் சாட்டியுள்ளார்.



