சவேந்திர சில்வாவிற்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டுமென பரிந்துரை
முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக குற்ற விசாரணைப் பிரிவு ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் அப்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிற்கும் அவரது அரசாங்கத்திற்கும் எதிராக பாரியளவில் நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் வெடித்திருந்தன.
சவேந்திர சில்வா மீது குற்றச்சாட்டு
இந்த போராட்டங்களில் ஓர் கட்டமாக கடந்த மே மாதம் 9ம் மற்றும் 10ம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறைகளை கட்டுப்படுத்த சவேந்திர சில்வா உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட தலைமையிலான மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை
இந்த குழு நேற்றைய தினம் தமது அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளது.
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டும் தாக்குதல் நடத்தப்பட்டும் இடம்பெற்ற வன்முறைகளை இராணுத்தினரும் பொலிஸாரும் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியும், அமைச்சர் பந்துல குணவர்தன உள்ளிட்ட சிலர் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன.
இந்த மனு எதிர்வரும் மே மாதம் 22ம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri
