குற்றமிழைத்த அனைவருக்கும் உச்சபட்ச தண்டனை - பாகிஸ்தானிய பிரதமர் உறுதி (செய்திகளின் தொகுப்பு)
பாகிஸ்தானில் இலங்கைப் பணியாளர் ஒருவர் சித்திரவதை செய்து படுகொலை செய்யப்பட்ட விடயத்தில், குற்றமிழைத்த அனைவருக்கும் உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் உறுதியளித்துள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தப் படுகொலையானது மிக மோசமான கொடூரச் செயல் எனவும் இதனை அரசாங்கம் வன்மையாக கண்டிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் (G.L.Peris) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,