மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் பஞ்ச இரதோற்சவ பெருவிழா
வரலாற்று பிரசித்தி பெற்ற மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் பஞ்ச இரதோற்சவ பெருவிழா நேற்று(23) பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து விநாயகப்பெருமான் ,முத்துகுமாரசுவாமி ,சிவன் அம்மன் ,சண்முகப்பெருமான் ,சண்டேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் உள்வீதி வலம் வந்து வெளியவீதி பஞ்ச இரதத்தில் எழுந்தருளினர்.
இரதோற்சவ பெருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் அடியவர்கள் காவடி ,கற்பூரசட்டி ,அங்கபிரதிஷ்டை என தமது நேர்த்தி கடன்களை எம்பெருமானுக்கு நிறைவேற்றினர்.
தீர்தோற்சவம்
கடந்த 30 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவ பெருவிழா ஆடி அமாவாசை தினமான இன்று(24) தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது.
இதேவேளை நாளை காலை சண்முகப்பெருமான் கீரிமலை புனித தீர்தக்கரையில் எழுந்தருளி தீர்தோற்சவ பெருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |












