மத்தள சர்வதேச விமான நிலையம் தொடர்பான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்
மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களை பிரித்தெடுத்தல் மற்றும் மறுசுழற்சி செயற்பாடுகளுக்கான மையம் ஒன்றை நிறுவுவதற்கான முன்மொழிவுக்கு இலங்கையின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் ஹொங்காங்கைத் தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்துடன் கூட்டு முயற்சியில் இத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த மையத்தில் அகற்றப்பட வேண்டிய விமானம் உடைக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தக்கூடிய பாகங்கள் பிரிக்கப்படும் மீதமுள்ளவை மறுசுழற்ச்சி செய்யப்படவுள்ளன.
நிலம் குத்தகைக்கு
இதற்காக ஆரம்பத்தில் விமான நிலைய நிலத்தின் காணியில் இருந்து ஒரு ஏக்கர் நிலம் குத்தகைக்கு விடப்படும் பின்னர் தேவைக்கு ஏற்ப அது விரிவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சின் அதிகாரிகள், ஹொங்கொங் நிறுவனத்தின் பிரதிநிதிகள் நாளை (12.02.2023) திங்கட்கிழமை மத்தள விமான நிலையத்திற்கு சென்று இதற்கான இடத்தை தெரிவு செய்யவுள்ளனர்.
இந்த தொழில் மையத்தை நிறுவுவதற்கு தேவையான ஆரம்ப முதலீடு சுமார் 250,000
அமெரிக்க டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.