கணித ஒலிம்பியாட் விநாடி வினாப் போட்டி: சர்வதேச மட்ட ரீதியில் 8 மாணவர்கள் தெரிவு
இந்த வருடம் நடைபெற்ற கணித ஒலிம்பியாட் விநாடி வினாப் போட்டியில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய மட்டத்தில் 8 மாணவர்கள் தெரிவாகி சர்வதேச கணித ஒலிம்பியாட் விநாடி வினாப் போட்டிக்கான மாணவர் குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அதிக எண்ணிக்கையான மாணவர்கள் ஒரே பாடசாலையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவே என தெரிவிக்கப்படுகின்றது.
ஒலிம்பியாட் விநாடி வினாப் போட்டி
வலயமட்ட போட்டியில் 60 மாணவர்கள் பங்கு பற்றி மாவட்ட மட்ட போட்டிக்காக அந்த 60 மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து மாகாணமட்ட போட்டிக்காக 24 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அதிலிருந்து 16 மாணவர்கள் தேசிய மட்ட போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையிலேயே தேசிய மட்ட போட்டியில் 8 மாணவர்கள் கணித ஒலிம்பியாட் விநாடி வினாப் போட்டியில் தெரிவு செய்யப்பட்டு சர்வதேச ரீதியில் நடைபெறும் கணித ஒலிம்பியாட் விநாடி வினாப் போட்டிக் குழாமில் இடம்பிடித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 7 மணி நேரம் முன்

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

பிரித்தானியாவில் அரங்கேறிய பயங்கரம்! வீட்டினுள் வைத்து சுட்டுக்கொலை..பெண் உட்பட இருவர் கைது News Lankasri

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri
