கொழும்பு அரசியலில் பாரிய கொந்தளிப்பான நிலைமை
கொழும்பு அரசியலில் பாரிய கொந்தளிப்பான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியில் பல அரசியல் குழப்பங்கள் இடம்பெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பலமான ஒருவரும் முன்னாள் அமைச்சர் ஒருவரும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணையத் தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
.மற்றொரு உறுப்பினருடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைய உள்ளார் என தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் ஊடகமொன்று வினவிய போது, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, விசேட விடயமாக கருதி அவ்வாறான கலந்துரையாடல்கள் நடத்தப்படவில்லை என தெரிவித்தார்.
ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து சுயாதீனமாக செயற்படும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

ரஷ்யாவின் எண்ணெய் உள்கட்டமைப்பு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: குறிவைக்கப்பட்ட முக்கிய நகரங்கள் News Lankasri
