இலங்கையில் எரிவாயுவிற்கு பாரிய தட்டுப்பாடு
இலங்கை சந்தையில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
லாப்ஸ் மற்றும் லிட்ரோ எரிவாயு இரண்டிற்குமே இதுவரையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதென நுகர்வோர் தெரிவித்துள்ளனர். நாட்டில் டொலர்கள் பற்றாக்குறை மற்றும் வணிக வங்கிகளால் கடன் கடிதங்கள் வழங்கப்படாததால் எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியவில்லை என லாப்ஸ் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, லாப்ஸ் மற்றும் லிட்ரோ எரிவாயு நிறுவனங்கள் இரண்டுமே எரிவாயு விலையை அதிகரிப்பதற்காக அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.