கனடா அனுப்புவதாக கூறி பாரிய மோசடி: பம்பலப்பிட்டியில் இரு பெண்கள் உட்பட மூவர் கைது
கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களை பண ரீதியில் ஏமாற்றியதற்காக பம்பலப்பிட்டியில் சந்தேகத்தின் பேரில் மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளால் போலி விசா ஸ்டிக்கருடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள், 69 வயதுடைய ஆண், ஒருவரும் 26 மற்றும் 68 வயதுடைய இரண்டு பெண்களும் அடங்குவர்.
பிற மோசடிகள்
கனடாவுக்கு மக்களை அனுப்புவதாகக் கூறி, பெண் சந்தேக நபர், இருவரிடம் 3,831,000 ரூபா மற்றும் 3,436,000 ரூபா என்ற வகையில் பணத்தை மோசடி செய்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், சந்தேகநபர்கள் இது போன்ற பிற மோசடிகளில் ஈடுபட்டார்களா என்பதைக் கண்டறிய பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri

Ethirneechal: எங்க காதல சேர்த்து வை.. வெறிக் கொண்டு சீறிய சக்தி- திருமணத்தில் புது திருப்பம் Manithan
