பங்களாதேஷில் வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிராகப் பிரமாண்ட போராட்டம்
பங்களாதேஷில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டிற்குத் தீர்வு காணக் கோரி, அந்நாட்டின் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளிலிறங்கிப் பிரம்மாண்ட போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
பங்களாதேஷில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து இடைக்கால நிர்வாகத்தை வழிநடத்தி வரும் பிரதமர் தாரிக் ரஹ்மான் தலைமையிலான புதிய அரசாங்கம் எதிர்கொள்ளும் முதலாவது மிகப்பெரிய மக்கள் போராட்டம் இதுவெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசுக்கு நெருக்கடி
தலைநகர் டாக்காவில் திரண்ட போராட்டக்காரர்கள், நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு, மின்சாரம் மற்றும் விவசாயத்திற்கான உரத் தட்டுப்பாடுகளை உடனடியாகத் தீர்க்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து முழக்கங்களை எழுப்பினர்.

கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இப் போராட்டம் வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவும், அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தைச் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லட்சுமி பிரியா முதல் பிளாக் பாண்டி வரை.. பிக் பாஸ் 10ல் நுழைந்த போட்டியாளர்கள் முழு லிஸ்ட் Cineulagam