யாழ் நகரின் மத்தியில் ஏற்பட்டுள்ள பாரிய குழி: பொதுமக்கள் விசனம்(Photos)
யாழ்.நகரின் மத்தியில் பாரிய குழி ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக உள்ள ஞான வைரவர் ஆலய வீதியில் வீதியின் நடுவே கழிவு நீர் செல்லும் வாய்க்கால் ஒன்றில் பாரிய குழி ஏற்பட்டுள்ளது.
இதனால் யாழ்.நகரில் பயணிக்கும் பொதுமக்கள் பாரிய இடையூறுகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
பொதுமக்கள் விசனம்
மாநகர சபைக்கு சொந்தமான குறித்த பகுதியில் வீதியில் நடுவில் போக்குவரத்துக்கு இடையூறாகவுள்ள குழி திருத்தப்படவோ அல்லது வீதியால் பயணிப்போருக்கு அவ்விடத்தில் பாரிய குழி உள்ளது என்ற எச்சரிக்கை போடுவதற்கும் சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கை எடுக்காமைக்கு பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
வீதியின் நடுவில் குழி காணப்படுவதன் காரணமாக அவ்விடத்தில்
விபத்துக்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



