இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பு
இலங்கையில் தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை சந்தையில் இன்று வரையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை செய்கூலியுடன் சேர்த்து 124000 ரூபாவை கடந்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை அதிகரிக்க கூடும் என குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையில் தங்கத்திற்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தங்க நகை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எப்படியிருப்பினும் தங்க நகைகளை உற்பத்தியாளர்கள் பதுக்கி வைத்துள்ளமையினாலேயே இவ்வாறு தங்க விலை அதிகரித்துள்ளதாக குறிப்படுகின்றது.
தங்கத்தின் விலையில் ஏற்பட்ட பாரிய அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் நாட்களில் தங்கம் இறக்குமதி செய்வதற்கு இலங்கை வங்கி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan