இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பு
இலங்கையில் தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை சந்தையில் இன்று வரையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை செய்கூலியுடன் சேர்த்து 124000 ரூபாவை கடந்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை அதிகரிக்க கூடும் என குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையில் தங்கத்திற்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தங்க நகை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எப்படியிருப்பினும் தங்க நகைகளை உற்பத்தியாளர்கள் பதுக்கி வைத்துள்ளமையினாலேயே இவ்வாறு தங்க விலை அதிகரித்துள்ளதாக குறிப்படுகின்றது.
தங்கத்தின் விலையில் ஏற்பட்ட பாரிய அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் நாட்களில் தங்கம் இறக்குமதி செய்வதற்கு இலங்கை வங்கி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam