பாரிய குழு மோதல்: எஸ்.டி.எப் அதிகாரி உட்பட இருவர் வெட்டிப் படுகொலை - செய்திகளின் தொகுப்பு (video)
இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரியொருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
கிரியுல்ல பிரதேசத்தில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.
தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்ற இந்தக் குழு மோதலில் இருவரும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளைக் கிரியுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,