அடுத்தடுத்து 3 நாடுகளை மிரட்டிய பாரிய நில நடுக்கங்கள்! உலக செய்திகளின் தொகுப்பு
உலகப் பரப்பில் கடந்த சில நாட்களாக சக்திவாய்ந்த நில நடுக்கங்கள் பதிவாகி வருகின்றன.
அதன்படி, நேற்றைய தினமும் (15.06.2023) இன்றைய தினமும் (16.06.2023) 3 நாடுகளில் நில நடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
தென் பசிபிக் பெருங்கடலில் டோங்கா தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்க மேற்கு கடற்கரை, பிரிட்டிஷ் கொலம்பியா அல்லது அலாஸ்காவிற்குச் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பிலான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு,