ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாரிய குண்டுவெடிப்பு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்து ஹமிட் கர்ஸாய் சர்வதேச விமான நிலையத்தின் கிழக்கு நுழைவாயிலுக்கு அருகில் வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தலிபான்களின் கட்டுப்பாடுகளால் அழுத்தங்களுக்கு உள்ளான ஆப்கானிஸ்தான் நாட்டவர்களில் பெரும்பாலானோர் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு விமான நிலையத்துக்கு வருகைதந்த வண்ணம் உள்ளனர்.
இதற்காக விமான நிலையம் அருகே ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த நிலையில் குண்டு வெடித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் உறுதி செய்துள்ளது.
U.S. Secretary of State Antony Blinken said there are still about 1,500 U.S. citizens in Afghanistan as Western nations rush to evacuate people from the country with less than a week until foreign troops leave https://t.co/eqpw2BrsK9 pic.twitter.com/2DBjQk3PjJ
— Reuters (@Reuters) August 26, 2021
இந்நிலையில், ஹமிட் கர்ஸாய் விமான நிலையத்துக்கு அருகில் குண்டுவெடிப்புகள் இடம்பெறலாம் என சர்வதேச புலனாய்வு பிரிவுகள் எச்சரிக்கை விடுத்து சில மணித்தியாலங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த பாதுகாப்பு எச்சரிக்கை காரணம் விமான நிலையத்துக்கு வருகை தருவதனை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதுவொரு தற்கொலை குண்டுத்தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் அதேவேளை, காயமடைந்தோர் மற்றும் உயிரிழந்தோர் தொடர்பான சரியான எண்ணிக்கை விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்சம்பவத்தில் சிறுவர்கள் உட்பட குறைந்தது 13 பேர் பலியாகியுள்ளதாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.




இந்தியாவில் ஒரு வாரமாக நிற்கும் F-35B போர் விமானம் - புதிய Royal Navy குழுவை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
