மோட்டார் சைக்கிள் மீது உழவு இயந்திரம் மோதி பாரிய விபத்து: ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு(Photos)
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா இசை நடனக் கல்லூரியின் முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் சிறுவன் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் நெல் அறுவடை செய்யும் உழவு இயந்திரத்தினை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மோதியதினாலேயே இன்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிள் மீது மோதி உழவு இயந்திரம் மோட்டார் சைக்கிளின் சாரதி மேல் ஏறியதில் சாரதி இடத்திலேயே தலை நசுங்கிப் பலியாகியுள்ளார்.
இச் சம்பவத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலை நிலவிய நிலையில் காத்தான்குடி பொலிஸார் ஸ்தலத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன், உழவு இயந்திர சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
