யாழில் நடந்த படுகொலை - பதுங்கியிருந்தவர்களை சுற்றிவளைத்து பிடித்த பொலிஸார்
யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவரை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
வல்வெட்டித்துறையில் குடும்பத்தகராறு காரணமாக 2 பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பித்த உறவினர்கள் இருவரும் 3 வாரங்களின் பின்னர் இன்று திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஓகஸ்ட் 17ஆம் திகதி நள்ளிரவு 12.30 மணிக்கு இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றது. சம்பவத்தில் 30 வயதான சுப்பிரமணியம் கிருசாந்தன் என்ற 2 பிள்ளைகளின் தந்தை கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் கொலையுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் திருகோணமலை பொலிஸ் பிரிவில் உள்ள சின்னத்தோட்டம் மதவடி என்ற பகுதியில் பதுக்கியிருப்பதாக தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்த திருகோணமலை பொலிஸாரின் விசேட நடவடிக்கையின் மூலம் 41 வயது சந்தேக நபர் இன்று காலை கைது செய்யப்பட்டார். மற்றையவர் பொலிஸாரின் வருகையறிந்து தப்பியோடிய நிலையில் இன்று மாலை கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் இருவரையும் திருகோணமலை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.