காசாவில் நூற்றுக்கணக்கான உடல்கள் அடங்கிய புதைகுழிகள் : வெளியான அறிக்கை
காசாவில் உள்ள நாசர் மற்றும் அல் ஷிஃபா மருத்துவ வசதிகள் அழிக்கப்பட்டமை மற்றும் அங்கு நூற்றுக்கணக்கான உடல்கள் அடங்கிய வெகுஜன புதைகுழிகள் பற்றிய அறிக்கைகளால் தான் "திகிலடைந்தேன்" என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் தலைவர் வோல்கர் டர்க் கூறியுள்ளார்.
இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையரின் பேச்சாளர் ரவினா ஷம்தாசனி மேலும் தெரிவிக்கையில்,
இந்த வாரம் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையில் இஸ்ரேலிய துருப்புக்களால் கைவிடப்பட்டன. இதன் பின்னர் பலஸ்தீன அதிகாரிகள் புதைகுழிகளில் பல உடல்களைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.
எச்சரிக்கை எழுப்ப வேண்டிய அவசியம்
"பல உடல்கள் தெளிவாகக் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் எச்சரிக்கையை எழுப்ப வேண்டிய அவசியத்தை நாங்கள் உணர்கிறோம்" என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையரின் பேச்சாளர் ரவினா ஷம்தாசனி கூறியுள்ளார்.
இவ்வாறு மீட்கப்பட்ட உடல்களில் சிலவற்றின் கைகள் கட்டப்பட்டிருந்தன. இது சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களின் கடுமையான மீறல்களைக் குறிக்கின்றது.
மேலும் இவை மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும்,நாசரில் 283 உடல்களும் அல் ஷிஃபாவில் 30 உடல்களும் கண்டெடுக்கப்பட்டதாக கூறும் பாலஸ்தீனிய அதிகாரிகளின் அறிக்கைகளை உறுதிப்படுத்தும் பணியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் செயல்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
குறித்த அறிக்கைகளின் படி, சில உடல்கள் கழிவுக்குவியல்களுக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெண்களும், முதியவர்களும் அடங்குவர்.

ஹமாஸ் நடத்தும் சிவில் அவசர சேவை
காசாவின் ஹமாஸ் நடத்தும் சிவில் அவசர சேவை, நேற்று செவ்வாயன்று நாசரில் உள்ள ஒரு வெகுஜன புதைகுழியில் மொத்தம் 310 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் இரண்டு புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் தோண்டப்படவில்லை என்றும் கூறியுள்ளது.
எனினும் ஹமாஸ் போராளிகள் மருத்துவமனைகளை தளமாக பயன்படுத்துகின்றனர் என்றும், அல் ஷிஃபாவில் சுமார் 200 போராளிகளை தமது படைகள் கொன்று பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் தவிர்த்ததாக இஸ்ரேல் கூறுகின்றது.
இதன்படி, சுமார் 1.2 மில்லியன் பொதுமக்கள் ஒன்று கூடியுள்ள ரஃபா மீதான முழு அளவிலான ஊடுருவலுக்கு எதிரான எச்சரிக்கையையும் அவர் மீண்டும் மீண்டும் கூறியுள்ளார்.

வன்முறைகள் அதிகரிப்பு
இது "மேலும் அட்டூழிய குற்றங்களுக்கு" வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்தார். ஹமாஸ் மீதான இஸ்ரேலின் போர் அக்டோபர் 7 ஆம் திகதி தொடங்கியதில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் வன்முறைகள் அதிகரித்துள்ளன.
இதற்கிடையில் Nur Shams இல் பாதிக்கப்பட்ட சிலர் வெளிப்படையான சட்டத்திற்கு புறம்பான மரண தண்டனைகளால் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகத்திற்கு அறிக்கைகள் கிடைத்துள்ளதாகவும் ஷம்தாசனி கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam