மர்மமான முறையில் உயிரிழந்த திருமணமான யுவதி
குருநாகல் - படுவஸ்நுவர, கிரிமதிய பிரதேசத்தில் 18 வயதுடைய திருமணமான யுவதியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
கிரிமதி, கெலின பிரதேசத்தினை சேர்ந்த 18 வயதுடைய யுவதி கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.
கணவனால் தாக்கப்பட்ட நிலையில், யுவதி உயிரிழந்துள்ளதாகவும், சந்தேகநபரான கணவர் இதுவரை பொலிஸாரால் கைது செய்யவில்லை எனவும் பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சடலத்தை வீதியில் வைத்து ஆர்ப்பாட்டம்
இந்நிலையில், சந்தேகநபரான கணவரை கைது செய்யுமாறு வலியுறுத்தி, உயிரிழந்த யுவதியின் உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இன்று (31) சடலத்தை வீதியில் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து உயிரிழந்த யுவதியின் தாய் பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும்,அதனை மீளப்பெறுமாறு அவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri
