மர்மமான முறையில் உயிரிழந்த திருமணமான யுவதி
குருநாகல் - படுவஸ்நுவர, கிரிமதிய பிரதேசத்தில் 18 வயதுடைய திருமணமான யுவதியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
கிரிமதி, கெலின பிரதேசத்தினை சேர்ந்த 18 வயதுடைய யுவதி கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.
கணவனால் தாக்கப்பட்ட நிலையில், யுவதி உயிரிழந்துள்ளதாகவும், சந்தேகநபரான கணவர் இதுவரை பொலிஸாரால் கைது செய்யவில்லை எனவும் பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சடலத்தை வீதியில் வைத்து ஆர்ப்பாட்டம்
இந்நிலையில், சந்தேகநபரான கணவரை கைது செய்யுமாறு வலியுறுத்தி, உயிரிழந்த யுவதியின் உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இன்று (31) சடலத்தை வீதியில் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து உயிரிழந்த யுவதியின் தாய் பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும்,அதனை மீளப்பெறுமாறு அவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
