கனடாவுக்கு வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்துள்ள மார்க் கார்னி
கனடாவில் நடைபெறவுள்ள ஜி7 மாநாட்டில் பங்கேற்குமாறு, இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கனேடிய பிரதமர் மார்க் கார்னி இந்த அழைப்பை, தொலைபேசி வாயிலாக விடுத்துள்ளார்.
மோசமான ராஜதந்திர முறுகல்
கடந்த இரண்டு ஆண்டுகளில், இரண்டு நாடுகளுக்கும் இடையில் மோசமான ராஜதந்திர முறுகல் ஏற்பட்டிருந்த நிலையிலேயே இந்த அழைப்பு செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியா ஜி7 நாடுகளின் உறுப்பினர் அல்ல என்ற போதிலும், 2025 ஜூன் 15 முதல் 17 வரை கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கனனாஸ்கிஸில் நடைபெறும், வருடாந்த கூட்டத்திற்கு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கனடாவின் அழைப்புக்கு நன்றி தெரிவித்துள்ள, இந்திய பிரதமர்மோடி, இந்தியாவும் கனடாவும் புதுப்பிக்கப்பட்ட உறவுடன், பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட நலன்களால் வழிநடத்தப்படும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இருதரப்பு உறவுகள்
சீக்கிய பிரிவினைவாதத் தலைவரின் கொலையில் இந்தியா தொடர்புப்பட்டுள்ளதாக, கனடா குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இருதரப்பு உறவுகள் மோசமடைந்தன.

எனினும் இந்த குற்றச்சாட்டை புதுடில்லி மறுத்ததுடன், கனேடிய இராஜதந்திரிகளையும் வெளியேற்றியது. பதிலுக்கு கனடாவும் இந்திய ராஜதந்திரிகளை வெளியேற்றியது.
இந்தியாவை பொறுத்தவரை, அது, கனடாவின் 10வது பெரிய வர்த்தக பங்காளியாகும் இதன்படி, இந்தியாவுக்கு பருப்பு வகை உள்ளிட்டு பொருட்களை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடாக கனடா விளங்குகிறது.
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam