உயிருக்கான பேரணி! துப்பாக்கிகளுக்கு எதிராக ஒன்று திரண்ட அமெரிக்க மக்கள்!
துப்பாக்கி கலாசாரம்
துப்பாக்கி கலாசாரத்துக்கு எதிராக அமெரிக்காவில் பாரிய பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன.
அண்மைக்காலமாக அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு பாரிய துப்பாக்கிச் சூடு சம்பவங்களை அடுத்து, கடுமையான துப்பாக்கிச் சட்டங்களுக்கு அழைப்பு விடுத்து பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் அமெரிக்கா முழுவதும் இந்த பேரணிகளை நடத்தினர்.
பேரணிகளில் பங்கேற்றவர்கள், "சுடப்படுவதில் இருந்து எனக்கு விடுதலை வேண்டும்" போன்ற முழக்கங்களை ஏந்தியிருந்தனர்.
அமெரிக்க ஜனாதிபதியின் அழைப்பு
இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்தப் போராட்டங்களை ஆதரவு தெரிவித்துள்ளார். துப்பாக்கி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற அமெரிக்க காங்கிரஸுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
2022, மே 24 அன்று டெக்சாஸின் உவால்டேயில் உள்ள ரொப் எலிமெண்டரியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து நியூயார்க்கின் பஃபேலோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்ட பின்னரே அமெரிக்காவில் துப்பாக்கிக் கட்டுப்பாடு மீதான புதிய கோரிக்கைகளுக்கு வழியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றம் மீது திடீர் தாக்குதல்: அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் தேசிய கொடி