மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ரணிலுடன்..!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை (SLPP) பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அதன்படி நேற்று காலை வரை எண்பதுக்கும் மேற்பட்டோர் ரணிலுடன் இருப்பதாக உள்ளக வட்டாரங்கள் மூலம் தகவல் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
கடந்த ஆட்சிக்காலத்தில் 69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைத்துச் சென்று அரசியல் மாற்றத்திற்கு உட்படுத்தினார்.
இதே நிலையை நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்திலும் சமல் ராஜபக்சவின் மௌனக் கொள்கையே காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“அவருக்கும் ஹார்மோன் ஊசி போட்டிருக்க வேண்டும். அவர் சுறுசுறுப்பாக இல்லாமல் இருக்கலாம். ஒரு ஹார்மோன் வேலை செய்ய நேரம் எடுக்குமே…” என்று தெரிவித்த அவர், இதன்படி எதிர்காலத்தில் ரணில் விக்ரமசிங்கவின் மேடையில் ராஜபக்ச ஒருவர் தோன்றினாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri
