பல அலுவலக தொடருந்துகள் இன்று முதல் மீண்டும் இயக்கப்படும்!
புஜ்ஜோமுவ பகுதியில் அவசர பழுதுபார்ப்பு பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து, பிரதான பாதையின், பல அலுவலக தொடருந்துகள் இன்று (10) முதல் மீண்டும் இயக்கப்படும் என்று தொடருந்துகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அம்பேபுஸ்ஸ மற்றும் அலவ்வ ஆகிய இடங்களுக்கு இடையே அமைந்துள்ள புஜ்ஜோமுவ தொடருந்து நிலையத்திற்கு அருகில் மா ஓயா நதியின் நிரம்பி வழிந்ததால், தொடருந்து பாதை சேதமடைந்திருந்தது.
45 அடி ஆழம்
இந்த சம்பவத்தால் தண்டவாளத்தின் அடியில் கிட்டத்தட்ட 45 அடி ஆழத்தில் ஒரு பள்ளம் ஏற்பட்டு, பிரதான, வடக்கு மற்றும் கிழக்கு பாதைகளில் தொடருந்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதன் விளைவாக, பல நாட்களுக்கு கொழும்பு கோட்டை- அம்பேபுஸ்ஸ பிரிவில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.
திணைக்களத்தின் கூற்றுப்படி, இலங்கை இராணுவத்தின் தன்னார்வ குழுக்கள் மற்றும் பணியாளர்கள் நேற்று தண்டவாளத்தின் குப்பைகளை அகற்றி சேதமடைந்த பகுதியை மீட்டெடுக்க இணைந்து பணியாற்றினர்.
இந்த நிலையில், பழுதுபார்ப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ரம்புக்கன, பொல்கஹவெல மற்றும் குருநாகலிலிருந்து அலுவலக தொடருந்துகளை, வழக்கம் போல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri