1.8 மில்லியன் யூரோ அவசர நிதியுதவி வழங்கியுள்ள ஐரோப்பிய ஒன்றியம்
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட கடும் மண்சரிவு மற்றும் வெள்ளப் பேரழிவுகளுக்கு பதிலளிக்கும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம் (EU) 1.8 மில்லியன் யூரோ அவசர நிதியுதவியை விடுவித்துள்ளது.
மிகவும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அத்தியாவசிய நிவாரணங்களை வழங்குவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளதோடு, இதில் 500,000 யூரோ சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் ஊடாக வழங்கப்படவுள்ளது.
சர்வதேச உதவிகள்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நின்று, அவர்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதாக ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் ஹாட்ஜா லஹ்பிப் தெரிவித்துள்ளார்.

இந்த நிதியுதவிக்கு மேலதிகமாக, ஜேர்மனி 4,600 தங்குமிடப் பொருட்களையும், பிரான்ஸ் 3,400 பொருட்களையும் வழங்கியுள்ளன. அதேவேளை இத்தாலி பொறியியல் நிபுணர்கள் குழுவை அனுப்பியுள்ளது.
மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் அவசரகால செய்மதி சேவை மூலம் இதுவரை 30 வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், 2025 இல் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான மொத்த மனிதாபிமான உதவி 87 மில்லியன் யூரோவை எட்டியுள்ளதாகவும் ஐரோப்பிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 13 மணி நேரம் முன்
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri