தமிழ் முற்போக்குக் கூட்டணியை அசைக்க முயல வேண்டாம்: மனோ கணேசன் ஆவேசம்
“தமிழ் முற்போக்குக் கூட்டணியையும் அசைக்க யாரும் முயல வேண்டாம். இங்கே அந்தப் பருப்பு, இந்த நெருப்பில் வேகாது” என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவரது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,"தமிழ் முற்போக்கு கூட்டணி அரசுடன் இணையவோ அல்லது அமைச்சுப் பதவிகள் பெறவோ தீர்மானிக்கவில்லை.
தேசிய சர்வகட்சி வேலைத்திட்டம்
உண்மையில் நாட்டை கரை சேர்க்க “தேசிய சர்வகட்சி வேலைத்திட்டம்” என்ற தலைப்பில் ஜனாதிபதி விடுத்த அழைப்புக்கான எமது பதில் தொடர்பில் ஐக்கிய மக்கள் கூட்டணிக்குள்ளே நாம் கடுமையாக இரவு பகல் உரையாடிக்கொண்டு இருக்கின்றோம்.
ஜனாதிபதியை ஐக்கிய மக்கள் கூட்டணியாகக் கடந்த 5ஆம் திகதி சந்தித்தோம். இதனை தொடர்ந்து தமிழ் முற்போக்குக் கூட்டணியாக எதிர்வரும் 10ஆம் திகதி சந்திக்கவுள்ளோம்.
விசேட உரையாடல்
மேலும் பிரதிநிதித்துவம் செய்யும் எமது மக்களின் அபிலாஷை, சவால்கள் பற்றி உரையாடவுள்ளோம்.“அமைச்சுப் பதவிகளுக்காக கூட்டணிக்குள் முரண்பாடு”என்று பல ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் எற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் டளசுக்கு இத்தனை பேர், ரணிலுக்கு இத்தனை பேர்' என்று முடித்தாகி விட்டது.
அதே வேளை இப்பொழுது தமிழ் முற்போக்குக் கூட்டணியை அசைக்க யாரும் முயல
வேண்டாம். இங்கே அந்தப் பருப்பு இந்த நெருப்பில் வேகாது, நாம் ஒன்று சேர்ந்து தான்
முடிவுகள் எடுப்போம்" என தெரிவித்துள்ளார்.