அநுர அரசாங்கத்திற்குள் புதிய ஏகபோகக் குழுக்கள்: மனோ கணேசன் எச்சரிக்கை
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அரசாங்கத்திற்குள் புதிய ஏகபோகக் குழுக்கள் உருவாகி வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் தனது சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஏகபோகக் குழுக்கள் உருவாகும் அபாயம்
அதில், இவர்கள் பழைய ஆட்கள் அல்லாத போதிலும், ஒரு ஏகபோகக் குழுவை மாற்றி மற்றொரு புதிய குழு உருவாகும் அபாயம் நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, எரிவாயு, எரிபொருள் மற்றும் மருந்து கொள்வனவு தொடர்பாக நிலவி வந்த ஏகபோகக் குழுக்களை உடைக்க ஜனாதிபதி மேற்கொண்டு வரும் முயற்சிகளை, நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மனோ கணேசன் பாராட்டியுள்ளார்.
அதேவேளை, பழைய ஏகபோகங்கள் நீக்கப்பட்டாலும், அரசாங்கத்துடன் நெருக்கமான தொடர்புகள் கொண்ட பெருநிறுவனங்கள் புதிய போர்வையில் மீண்டும் இக்குழுக்களை உருவாக்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உச்சகட்டத்தில் ஈரான் மற்றும் இஸ்ரேல் போர்! தயார் நிலையில் அவசர சேவைகள் - சுட்டுவீழ்த்தப்படும் ஏவுகணைகள்
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
சன் டிவியிடம் வேண்டுகோள் வைக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள்... என்ன தெரியுமா? Cineulagam