சீன நிறுவனங்களின் நிதியுதவிகள்: அரசாங்கத்திடம் மனோ கணேசன் விடுத்துள்ள கோரிக்கை
சீன (China) நிறுவனங்களிடமிருந்து ஏற்கனவே நிதியுதவி பெற்றவர்களின் பெயர்களை வெளியிடுமாறு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சீன விஜயம்
அநுரகுமார திஸாநாயக்க இந்த வாரம் சீனாவுக்கு விஜயம் செய்யும் நிலையில், எதிர்காலத்தில் இலங்கையின் இடைத்தரகர்களுக்கு பணம் செலுத்த வேண்டியதில்லை என்று சீன நிறுவனங்களுக்குத் தெரிவிப்பார் என்ற தகவல்கள் தொடர்பிலேயே மனோ கணேசன் தமது கோரிக்கையை விடுத்துள்ளார்.

ஊழலைக் கட்டுப்படுத்தும் ஜனாதிபதியின் நடவடிக்கையை வரவேற்ற நாடாளுமன்ற உறுப்பினர், இடைத்தரகர்களான இலங்கையர்களுக்கு நிதியுதவி வழங்கும் சீன நிறுவனங்களை அவர் இனங்காணவில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், கடந்த காலத்தில் இத்தகைய நிதியுதவி பெற்ற இடைத்தரகர்களின் பெயர்களை தாமதமின்றி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிடுவது முக்கியம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri