4 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் சிக்கிய நபர்
கொழும்பிற்கு அருகில், நான்கு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு - நவகமுவ பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
நவகமுவ, கொரதொட்டை , வெலிஹின்ன பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்படும் போது அவரிடம் இருந்து நான்கரை கிலோ ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த போதைபொருளின் பெறுமதி நான்கு கோடி ரூபா என கணிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக சந்தேக நபரிடம் இருந்து ஐநூறு கிராம் எடைகொண்ட ஹெரோயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் நவகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam