மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் கத்திக்குத்து: ஒருவர் கைது
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் படுகாயமடைந்த நபரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலை நோயாளர் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் - நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த நபர் மீது கத்திக்குத்துத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணை
குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அண்மையில் நொச்சிக்குளம் பகுதியில் இரு சகோதரர்கள் வாள்வெட்டு தாக்குதலில் பலியாகிய நிலையில், நள்ளிரவில் நொச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கத்திகுத்துக்கு இலக்காகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




