வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்ட மன்னார் அபிவிருத்தி செயற்திட்டம்
நகரங்களை அபிவிருத்தி செய்யும் நோக்குடன், 20 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்ட மன்னார் நகர அபிவிருத்தி செயற்திட்டம் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் (Kather Mastan) தலைமையில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வு நேற்று (26) மாலை இடம்பெற்றுள்ளது.
நாட்டில் நீண்ட காலமாக அபிவிருத்தி செய்யப்படாத நிலையில் காணப்படும் 100 நகரங்களை அபிவிருத்தி செய்யும் நோக்குடன், சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கு அமைய பிரதான நகரங்கள் மற்றும் பிரதேச நகரங்களுக்கு இடையிலான ஏற்றத் தாழ்வுகளை குறைத்து அனைத்து மக்களுக்கும் சமமான ஒரு நகர வசதிகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கோடு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி கரையோர பாதுகாப்பு, கழிவுப் பொருட்கள் அகற்றுகை, சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சுடன் இணைந்து குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மெல் (A. Stranley de Mel), மன்னார் பிரதேசச் செயலாளர் எம். பிரதீப்(M. Pradeep), நகர அபிவிருத்தி செயற்திட்ட மாகாண பணிப்பாளர் டி.பி.எஸ். திஸநாயக்க(D.P.S. Dissanayake), மன்னார் நகர முதல்வர் ஞா.அன்ரனி டேவிட்சன் (N. Anthony Davidson) உட்பட பலரும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri