வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட மன்னா ரமேஷ்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Sri Lanka Police Colombo Dubai Supreme Court of Sri Lanka Sri Lanka Police Investigation
By Dhayani May 08, 2024 06:05 AM GMT
Report

டுபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்படைய பிரதான சந்தேகநபரான “ மன்னா ரமேஷ்யை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . 

கொலை, பாரிய போதைப்பொருள் கடத்தல், கப்பம் பெறுதல், பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தல், மாணிக்கக்கல் சுரங்கங்களை வலுக்கட்டாயமாக கைப்பற்றுதல் மற்றும் காதலிகள் தொடர்பான தகராறுகள் போன்ற பல வழக்குகளின் கீழ் நேற்று (07) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம்: அரசாங்கத்தின் அறிவிப்பு

விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம்: அரசாங்கத்தின் அறிவிப்பு

வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட மன்னா ரமேஷ்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Manna Ramesh Hiding In Dubai Inquiry Ordered

விசாரணைக்கு உத்தரவு

அவிசாவளை தல்துவ பிரதேசத்தில் தனது சகோதரனை அடித்து நிரந்தர ஊனமாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய மூவரை சுட்டுக் கொல்லவும் மன்னா ரமேஷ் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 4.30 மணியளவில் டுபாயிலிருந்து 226 என்ற விமானத்தில் விசேட பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட மன்னா ரமேஷ் குற்றப் புலனாய்வுத் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

மன்னா ரமேஷ் என்ற ரமேஷ் பிரிஜனகா தனது மனைவியுடன் காரில் பயணித்த போது டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் வியாபாரி ஒருவர் டுபாய் பொலிஸாருக்கு அளித்த இரகசிய தகவலின்படி, மன்னா ரமேஷ் காரில் போதைப்பொருள் வைத்திருந்ததாக சந்தேகமடைந்த பொலிஸார் காரை நிறுத்த உத்தரவிட்டுள்ளனர்.

இனிப்பு கலந்த பானங்களை பருகுவதை தவிர்க்கவும்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இனிப்பு கலந்த பானங்களை பருகுவதை தவிர்க்கவும்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட மன்னா ரமேஷ்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Manna Ramesh Hiding In Dubai Inquiry Ordered

டுபாய் பொலிஸ் அதிகாரிகளின் உத்தரவை மீறிய குற்றச்சாட்டு

இருப்பினும், டுபாய் பொலிஸ் அதிகாரிகளின் உத்தரவை மீறி மன்னா ரமேஷ் தொடர்ந்து வாகனம் ஓட்டியதால், உள்ளூர் பொலிஸார் காரை விரட்டி சென்று அவரை கைது செய்துள்ளனர்.

காரை சோதனையிட்டதில், அதில் போதைப்பொருள் எதுவும் இல்லை என்றும், மன்னா ரமேஷுக்கு எதிராக இலங்கை பொலிஸார் சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பெற்றிருந்ததால், இலங்கை பொலிஸார் அவரை காவலில் எடுத்துள்ளனர்.

மன்னா ரமேஷை கைது செய்தமை தொடர்பில் இலங்கை பொலிஸாருக்கு அறிவித்த டுபாய் பொலிஸார், குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் டுபாய் பொலிஸாருக்கு இடையில் 02 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளின் பின்னர் அவரை இலங்கைக்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்திருந்திருந்தனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று சில தினங்களுக்கு முன்னர் டுபாய் சென்று சட்ட நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு நேற்று அதிகாலை இந்த பாதாள உலக தலைவனை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளனர்.

வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட மன்னா ரமேஷ்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Manna Ramesh Hiding In Dubai Inquiry Ordered

குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று முதல் மன்னா ரமேஷிடம் நீண்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தி தடுப்புக் காவலில் வைக்க உத்தரவுகளைப் பெற்று மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

அவிசாவளை, இரத்தினபுரி, தல்துவ உள்ளிட்ட பல பிரதேசங்களில் மன்னா ரமேஷ் குறித்து அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டார் என்ற செய்தியை அறிந்ததும், பலர் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மங்கள தெஹிதெனியவின் மேற்பார்வையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

ஜனவரி முதல் வாகனங்களை இறக்குமதி செய்ய தீர்மானம்: வெளியான தகவல்

ஜனவரி முதல் வாகனங்களை இறக்குமதி செய்ய தீர்மானம்: வெளியான தகவல்

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு தொடர்பில் அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு தொடர்பில் அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு


  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US