மிக்ஸ் பாக்சின்கில் இந்தியாவில் தங்கம் வென்ற மாங்குளம் பெண்ணிற்கு கிடைத்த கௌரவம் (Photos)
இந்தியாவில் நடைபெற்ற மிக்ஸ் பாக்சின்கில் தற்காப்பு கலை போட்டியில் தங்கம் வென்ற மாங்குளத்தை சேர்ந்த ஜெகதீஸ்வரன் விஜிதாவிற்கு கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டிற்கு நேற்றைய தினம்(20) வருகை தந்திருந்த நிலையில் அவருக்கு மாங்குளம் மண்ணில் பெரும் கௌரவிப்பு நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றிருந்தது.
கிடைத்த கௌரவிப்பு

மாங்குளம் பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து கௌரவிப்பு நிகழ்வு ஆரம்பமாகி மாங்குளம் சந்தி வரை வீதி ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட விஜிதா பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களும் மற்றும் கழக வீரர்கள், மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இப் போட்டியானது கடந்த 27ஆம் திகதி இந்தியாவில் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 13 மணி நேரம் முன்
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam