இரத்தப் புற்றுநோயால் அவதிப்படும் தாய்: பாடசாலை செல்லும் மகன் - உதவியின்றி போராடும் பெண் (Video)
இலங்கையில் தற்போதைய நிலையில் சாதாரண நிலையை உடைய மக்களே அன்றாட உணவிற்கு பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.
இதில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் நிலைமை மேலும் பரிதாபமாக காணப்படுகிறது.
அதிலும் குறிப்பிட்டு சொல்வதானால் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் வெளியில் சொல்லமுடியாதளவு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் மாங்குளத்தில் இரத்தப் புற்றுநோயால் அவதிப்படும் தாயாரை பராமரித்துக் கொண்டு, யாருடைய உதவியும் இன்றி தனது மகனுடன் வாழ்ந்து வரும் பெண்ணொருவரின் அவல நிலையை தாங்கி வருகிறது உறவுப்பாலம் நிகழ்ச்சி,