யாழில் குழந்தைக்கு உணவு கேட்ட தந்தைக்கு ஆதரவாக களமிறங்கிய மணிவண்ணன்
யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி வடக்கு பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் கடந்த முதலாம் திகதி அன்று கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களுக்கும் இன்று (04) பருத்தித்துறை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
கடந்த 01ஆம் திகதி (01.12.2024) அன்று கைது செய்யப்பட்டு 2ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக்கப்பட்ட நிலையில் இன்றுவரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.
பிள்ளைகளுக்காக உணவு கோரிய வேளை
எனினும், இன்று மீண்டும் வழக்கு இடம்பெற்ற நிலையில் குறித்த வழக்கிற்கு சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையிலான சட்டத்தரணிகள் மன்றிற்கு முன்வைத்த விவாதத்தின் அடிப்படையில் குறித்த இரண்டு சந்தேக நபர்களுக்கும் பருத்தித்துறை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
கடந்த மாதம் 30ஆம் திகதி கற்கோவளம் பகுதியில் கிராம சேவகரிடம் பிள்ளைகளுக்காக உணவு கோரியவேளை ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே, குறித்த கிராமசேவகர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதன் அடிப்படையிலேயே இந்த வழக்கு இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்பான செய்திகள்யாழில் கிராம அலுவலகருடன் முரண்பட்ட இருவருக்கு விளக்கமறியல் உத்தரவு..! |
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri
