மணிவண்ணன் நல்லிணக்க அடிப்படையிலே கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார் - சட்டத்தரணி ரெமிடியஸ்
யாழ் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் நல்லிணக்க அடிப்படையிலே கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ரெமிடியஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஊடக மன்றத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மாநகர முதல்வர் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் சாதாரண வழக்கிற்கு மாற்றப்பட்டு விடுவிக்கபட்டமை அரசின் நல்லிணக்க வெளிப்பாடாகும்.
மணிவண்ணனை விடுதலை செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியுடன் நேரடியாகப் பேசியிருந்தார் எனத் தெரிவித்துள்ளார்.
(WDR16)