வவுனியாவில் ஒரு மில்லியன் ரூபாவிற்கு ஏலமிடப்பட்டுள்ள மாம்பழங்கள் (video)
வவுனியாவில் ஒரு மில்லியன் ரூபாவிற்கு மூன்று மாம்பழங்களும், ஒரு மாலையும் ஏலம் போன நிகழ்வு ஒன்று நேற்று(21) இடம்பெற்றுள்ளது.
வவுனியா மரக்காரம்பளை வீதி கணேசபுரத்தில் அமைந்துள்ள ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்திலே இந்த ஏல விற்பனை நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
ஏல விற்பனை
இதற்கமைய ஆலயத்தின் அலங்கார திருவிழாவில், ஆறாம்நாள் திருவிழாவின் போது இறைவனுக்கு படைக்கப்பட்ட மூன்று மாம்பழங்களும் , ஒரு மாலையும் ஏலத்தில் விடப்பட்டுள்ளது.
இதன்போது கடும் போட்டிகளுக்கு மத்தியில் சபரிராஜன் என்ற மாணவன் அவற்றை ஒரு மில்லியன் ரூபாவிற்கு ஏலம் எடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கிராமப்புற ஆலயம் ஒன்றில் இவ்வாறு பெரிய தொகைக்கு மாம்பழங்கள் ஏலம் எடுக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் குறித்த ஏலத்தொகை ஆலயத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த ஏல விற்பனையில் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




