முல்லைத்தீவில் கடற்றொழிலுக்கு சென்றவரை காணவில்லை!
முல்லைத்தீவு கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் பகுதியில் கடற்றொழிலுக்கு சென்ற நபர் இன்னும் கரைக்குத் திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் நேற்று(27) இரவு 8:30 மணியளவில் கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் இன்னும் கரை திரும்பவில்லை.
23 அகவையுடைய வர்ணகுலசூரிய நெகித் ரவிஷா பெர்னாண்டோ என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
பொலிஸார் விசாரணை
இதனையடுத்து, இந்த நபரின் உறவினர்களால் கொக்கிளாய் பொலிஸ் நிலையத்தில் இன்று(28) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நபர் கடற்றொழிலுக்கு சென்ற OFRP/A/5286/PTM என்ற எண்ணைக் கொண்ட படகு நாயாறு முகத்துவாரத்தின் முகத்துவாரத்திற்கு அருகிலுள்ள கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கடற்றொழிலாளர் குறித்து எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





துளியளவும் பந்தா இல்லாமல் விசேஷத்தை கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் Manithan

சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri
