பாடசாலை சிறுமியை தகாத உறவுக்கு உட்படுத்திய இளைஞன் கைது
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேவிபுரத்தில் வசிக்கும் 13 வயது பாடசாலை மாணவி ஒருவரை தகாத உறவிற்கு உட்படுத்திய இளைஞனை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாடசாலை சென்ற குறித்த சிறுமியை காணவில்லை என கடந்த18ஆம் திகதி சிறுமியின் தாயாரால் புதுக்குடியிருப்பு பொலிஸில் முறைப்படு செய்யப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தில் சிக்கல்: தப்பிச் சென்ற ஜனாதிபதிக்கு 3 கோடி ரூபா - சபையில் வெளியான தகவல்
மருத்துவ பரிசோதனை
சிறுமியின் தாயாரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நேற்று முன்தினம் முல்லைத்தீவு தீர்த்தக்கரை பகுதியில் சிறுமியையும் இளைஞனையும் கைது செய்துள்ளதுடன், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் மருத்துவ பரிசோதனைகளில் சிறுமி தகாத உறவிற்கு உட்படுத்தியமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இளைஞனை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி வரை இளைஞனை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan