யாழில் 8 வயது சிறுமிக்கு தாயின் உறவினரால் நேர்ந்த துயரம் - நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
யாழில் எட்டு வயதுச் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
அதன்படி, குறித்த சந்தேகநபர் எதிர்வரும் 15.05.2026வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அராலி தெற்கு பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி தாய்வழி உறவினரான இளைஞர் ஒருவரால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டார்.
விளக்கமறியல்
இது குறித்து சிறுமியின் தாயார் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
அந்தவகையில் குறித்த சந்தேகநபரை பொலிஸார் நேற்றுமுன்தினம்(1) கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரை நேற்றைதினம்(2.5.2026) மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
போதைப் பொருட்களை கடத்தி வந்த 22 தேரர்கள்! சரணடைந்த தொழிலதிபர் - சம்மந்தப்பட்டுள்ள பிரித்தானிய நாட்டவர்
சிந்தாமணியின் சூழ்ச்சி.. சொந்த வீட்டை விட்டு வெளியேறும் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam