கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை: சந்தேக நபர் கைது
மைத்துனரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் 28 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் புத்தளம், கற்பிட்டி - கந்தகுளிய பகுதியில் நேற்றிரவு (22.10.2023) இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் கைது
குறித்த பகுதியில் வசிக்கும் 34 வயதுடைய ஒருவரே கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளார்.
தனது இரு மைத்துனர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைச் சமரசம் செய்ய முற்பட்டபோதே அவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளைக் கற்பிட்டிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.