கட்டி வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நபர்
இரத்தினபுரி, கெட்டலியன்பல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் கெட்டலியன்பல்ல, கஹங்கம, இரத்தினபுரி முகவரியை சேர்ந்த 61 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இக்கொலை இன்று அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொடூரமான முறையில் கொலை
அலவங்கினால் தலையில் தாக்கி, கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில், கொலை செய்யப்பட்ட நபர் நாற்காலியில் கட்டி வைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
கொலை சம்பவம் தொடர்பாக குறித்த வீட்டின் உரிமையாளரின் சகோதரன் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் வீட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25